+1 514-800-2610

தாயின் மரணத்தால் நிலைகுலைந்த மகன் மாரடைப்பால் உயிரிழப்பு.

2024-02-26 05:14
இலங்கைச் செய்திகள்

தாயின் மரணத்தால் நிலைகுலைந்த மகன் ஒருவர், தாய் உயிரிழந்த சில மணித்தியாலங்களில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்தரமுல்ல, அகடேகொட, இந்துருவாவில் வசித்து வந்த 71 வயதுடைய 7 பிள்ளைகளின் தாயான மெடில்டா பரணமான்ன கடந்த 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அவருடைய 5 ஆவது மகனான 47 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான லக்சிரி கோட்டஹாச்சியே தாயை பராமரித்து வந்ததாகவும், தாயின் மரணத்தால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும் தாய் உயிரிழந்த சில மணித்தியாலங்களில் மாரடைப்பு ஏற்பட்டு அவரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், உயிரிழந்த மகனின் இறுதிக் கிரியைகள் தாயின் இறுதிக்கிரியைகளுடன் நேற்று (24) ஒரே நேரத்தில் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி